சூன் 28 கிரிகோரியன் ஆண்டின் 179 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 180 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1098 – முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் மோசுல் படைகளைத் தோற்கடித்தனர்.

1360 – ஆறாம் முகம்மது கிரனாதாவின் 10வது நசுரிது வம்ச மன்னராக குடிசூடினார்.

1461 – நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.

1519 – ஐந்தாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1635 – குவாதலூப்பு பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது.

1651 – பெரெசுடெச்கோவில் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.

1709 – உருசியாவின் முதலாம் பேதுரு சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னரை பொல்தாவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தார்.

1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜார்ஜ் வாசிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளரும், அமெரிக்க விடுதலைப் படையைச் சேர்ந்தவருமான தோமசு ஹிக்கி தூக்கிலிடப்பட்டார்.

1838 – விக்டோரியா ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக முடிசூடினார்.

1846 – அடோல்ப் சக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமம் பெற்றார்.

1881 – ஆத்திரிய-செர்பியக் கூட்டணி இரகசியமாக கையெழுத்திடப்பட்டது.

1882 – கினி, சியேரா லியோனி நாடுகளுக்கிடையில் எல்லை நிர்ணயிக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

1894 – அமெரிக்கத் தொழிலாளர் நாள் அமெரிக்காவில் அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

1896 – அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 58 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1902 – பனாமா கால்வாயின் உரிமைகளை கொலொம்பியாவிடம் இருந்து பெறுவதற்கான அதிகாரங்களை அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட்டுக்கு ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் வழங்கியது.

1904 – “நோர்ஜ்” என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் உயிரிழந்தனர்.

1911 – நாக்லா என்ற விண்கல் எகிப்தில் வீழ்ந்தது.

1914 – ஆத்திரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி இளவரசி சோஃபி ஆகியோர் சாரயேவோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது காவ்ரீலோ பிரின்சிப் என்ற பொசுனிய-செர்பிய தேசியவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் தொடங்க இது காரணமானது.

1917 – முதலாம் உலகப் போர்: கிரேக்கம் கூட்டு அணிகளுடன் இணைந்தது.

1919 – வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. செருமனிக்கும் முதலாம் உலகப் போரின் நேச அணிகளுக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.

1922 – ஐரிய உள்நாட்டுப் போர் டப்லினில் ஆரம்பமானது.

1926 – காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரின் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் உருவானது.

1940 – உருமேனியாவிடம் இருந்து மல்தோவாவை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி சோவியத் ஒன்றியம் மீது நீலத் திட்டம் என்ற பெயரில் தாக்குதலை ஆரம்பித்தது.

1948 – பனிப்போர்: டீட்டோ–இசுட்டாலின் பிரிவை அடுத்து யுகொசுலாவியப் பொதுவுடமைவாதிகளின் அணி கொமின்ஃபோர்மில் இருந்து நீக்கப்பட்டது.

1950 – கொரியப் போர்: சியோல் வடகொரியப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

1950 – கொரியப் போர்: 100,000 இற்கும் அதிகமான கம்யூனிச சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1950 – கொரியப் போர்: கொரிய மக்கள் இராணுவம் சியோல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் 700-900 வரையானோர் கொல்லப்பட்டனர்.

1964 – மல்கம் எக்ஸ் ஆப்பிரிக்க-அமெரிக்க ஒற்றுமை அமைப்பைத் தோற்றுவித்தார்.

1973 – வடக்கு அயர்லாந்தில் முதற்தடவையாக தேசியவாதிகளுக்கும், ஒன்றியவாதிகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வுக்கு வகை செய்யும் முகமாக பொதுத் தேர்தல்கள் இடம்பெற்றன.

1976 – அமெரிக்க, ஐக்கிய இராச்சியக் கூலிப்படைஅக்ளுக்கு அங்கோலா நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

1981 – தெகுரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இசுலாமிய குடியரசுக் கட்சியின் 73 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

1987 – இராணுவ வரலாற்றில் முதற்தடவையாக பொதுமக்கள் மீது வேதிப்பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கியப் போர் விமானங்கள் ஈரானின் சர்தாசுத் நகர் மீது தாக்குதல் நடத்தியது.

1995 – மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.

2004 – ஈராக்கில் இடைக்கால அரசிடம் ஆட்சி கையளிக்கப்பட்டது. அமெரிக்கா ஆதரவு ஆட்சி முடிவுக்கு வந்தது.

2009 – ஒண்டுராசு அரசுத்தலைவர் மனுவேல் செலாயா இராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2016 – துருக்கியின் இசுதான்புல் வானூர்தி நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர், 230 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1491 – எட்டாம் என்றி, இங்கிலாந்து மன்னர் (இ. 1547)

1577 – பீட்டர் பவுல் ரூபென்ஸ், பிளெமிய ஓவியர் (இ. 1640)

1653 – முகமது ஆசம் ஷா, முகலாயப் பேரரசர் (இ. 1707)

1712 – இழான் இழாக்கு உரூசோ, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1778)

1873 – அலெக்சிஸ் காரெல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர் (இ. 1944)

1876 – கிளாரா லூயி மாஸ், அமெரிக்க செவிலியர் (இ. 1901)

1906 – மரியா கோயெப்பெர்ட் மேயர், நோபல் பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1972)

1907 – தாவீது அடிகள், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1981)

1912 – கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர், செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 2007)

1915 – சாண்டோ சின்னப்பா தேவர், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1978)

1921 – பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)

1927 – பிராங்க் செர்வுட் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 2012)

1928 – ஹான்ஸ் பிலிக்ஸ், சுவீடன் அரசியல்வாதி

1930 – வில்லியம் சி. கேம்பல், நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து-அமெரிக்க உயிரியலாளர்

1930 – லியோ கோல்டுபெர்கெர், அமெரிக்க உளவியலாளர், பதிப்பாளர்

1934 – ஜார்ஸ் போலான்ஸ்கி, துனீசிய-பிரான்சிய ஊடகவியலாளர் (இ. 2015)

1937 – எஸ். எஸ். கணேசபிள்ளை, இலங்கை வானொலி, மேடை நடிகர் (இ. 1995

1938 – சி. சிவமகராஜா, இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 2006)

1940 – கர்பால் சிங், மலேசிய அரசியல்வாதி (இ. 2014)

1940 – முகம்மது யூனுஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வங்காளதேச பொருளியலாளர்

1942 – கிரிசு ஹானி, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (இ. 1993)

1946 – புரூஸ் டேவிசன், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1948 – செர்ஜி போட்ரோவ், உருசிய-அமெரிக்க இயக்குநர்

1971 – எலொன் மசுக், தென்னாப்பிரிக்க-அமெரிக்க தொழிலதிபர்

1995 – மாரியப்பன் தங்கவேலு, தமிழக-இந்திய மாற்றுத்திறனாளர், தடகள விளையாட்டு வீரர்

இன்றைய தின இறப்புகள்

1836 – ஜேம்ஸ் மாடிசன், அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (பி. 1751)

1889 – மரியா மிட்செல், அமெரிக்க வானியலாளர் (பி. 1818)

1914 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆத்திரிய இளவரசர் (பி. 1863)

1971 – ஹச். பி. அரி கௌடர், சென்னை மாகாண சட்டமன்றத் தலைவர் (பி. 1893)

1972 – பிரசந்தா சந்திரா மகாலனோபிசு, இந்திய அறிவியலாளர் (பி. 1893)

1976 – பு. இரா. புருடோத்தமர், வைணவத் தமிழறிஞர் (பி. 1901)

1981 – டெர்ரி பாக்ஸ், கனடிய ஓட்டவீரர் (பி. 1958)

2009 – அ. க. லோகிததாசு, இந்திய இயக்குநர் (பி. 1955)

2016 – ஐசக் சிஷி சூ, நாகாலந்து அரசியல்வாதி (பி. 1929)