சூன் 24 கிரிகோரியன் ஆண்டின் 175 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 176 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 190 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 217 – திராசிமின் ஏரி போரில் ஹன்னிபால் கையசு பிளாமினியசு தலைமையிலான உரோமைப் படைகலைத் தோற்கடித்தார்.

474 – யூலியசு நெப்போசு தன்னை மேற்கு உரோமைப் பேரரசராக அறிவித்தார்.

1314 – இராபர்ட்டு புரூசு தலைமையிலான இசுக்கொட்லாந்துப் படைகள் இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தன. இசுக்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.[1]

1340 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.

1374 – செருமனியின் ஆஃகன் நகரில் புனித ஜானின் நடனம் அந்நகர மக்களுக்கு மாயத்தோற்ரங்களைக் கொடுத்து மக்களை பித்துப் பிடித்தவர்கள் போல நடனமாட வைத்தது. மக்கள் மயங்கும் வரை நடனம் ஆடினர். இப்பித்து பின்னர் ஐரோப்பாவெங்கும் பரவியது.

1497 – ஜான் கபோட் வட அமெரிக்காவில் நியூபவுண்லாந்து தீவில் தரையிறங்கி, வைக்கிங்குகளுக்குப் பின்னர் அப்பகுதியை ஆராய்ந்த முதலாவது ஐரோப்பியர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1509 – எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.

1571 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி மணிலா நகரை அமைத்தார்.

1597 – கிழக்கிந்தியத் தீவுகளுக்கான முதலாவது இடச்சுப் பயணிகள் கப்பல் சாவகத்தை அடைந்தது.

1622 – மக்காவு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் டச்சு நாட்டவர் தோல்வி கண்டனர்.

1779 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜிப்ரால்ட்டர் மீதான பெரும் முற்றுகை ஆரம்பமானது.

1812 – நெப்போலியப் போர்கள்: உருசியாவினுள் ஊடுருவும் முயற்சியில் நெப்போலியனின் பெரும் படை நேமன் ஆற்றைக் கடந்தது.

1813 – கனடா, ஒண்டாரியோவில் பீவர் அணை சமரில் பிரித்தானிய, இந்தியக் கூட்டுப் படை அமெரிக்க இராணுவத்தைத் தோற்கடித்தது.

1821 – எசுப்பானியாவிடம் இருந்து வெனிசுவேலாவின் விடுதலைக்கான போர் கரபோபோ என்ற இடத்தில் நடைபெற்றது.

1856 – இலங்கையில் புகைப்படக்கலை பார்ட்டிங் என்பவரால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2]

1859 – சார்தீனியா, மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.

1880 – கனடாவின் நாட்டுப்பண்ணாகப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓ கனடா பாடல் முதல் தடவையாக பாடப்பட்டது.

1894 – பிரான்சின் அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.

1902 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு குடல்வாலழற்சியால் பாதிக்கப்பட்டதால், அவரது முடிசூடல் தள்ளிப்போடப்பட்டது.

1913 – கிரேக்கமும் செர்பியாவும் பல்காரியாவுடனான தொடர்பைத் துண்டித்தன.

1932 – சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சியை அடுத்து, மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.

1938 – 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.

1939 – சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது.

1948 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.

1950 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

1963 – ஐக்கிய இராச்சியம் சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சியை வழங்கியது.

1973 – அமெரிக்காவின் நியூ ஓர்லென்சில் தன்னினச் சேர்க்கையாளர்கள் கூடிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவைப்பு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

1989 – தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யான் சமீன் சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1997 – ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

2002 – தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் உயிரிழந்தனர்.

2004 – நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது.

2010 – ஆத்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்ட் பதவியேற்றார்.

2007 – கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

2013 – இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தமது அதிகாரத்தை முறை தவறிப் பயன்படுத்தியதாகவும், குறைவயது விலைமாது ஒருவருடன் உறவைப் பேணியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்

1542 – சிலுவையின் புனித யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1591)

1619 – ரைக்லாவ் வொன் கூன்சு, ஒல்லாந்த இலங்கையின் ஆளுநர் (இ. 1682)

1883 – யோன் மெட்சிங்கர், பிரான்சிய ஓவியர் (பி. 1956)

1885 – தாரா சிங், சீக்கிய அரசியல், சமயத் தலைவர் (இ. 1967)

1907 – கா. அப்பாத்துரை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1989)

1915 – பிரெட் ஆயில், ஆங்கிலேய வானியலாளர் (இ. 2001)

1921 – கண்ணதாசன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1981)

1928 – எம். எஸ். விஸ்வநாதன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2015)

1929 – கரோலின் சூமேக்கர், அமெரிக்க வானியலாளர்

1937 – அனிதா தேசாய், இந்திய-அமெரிக்க எழுத்தாளர்

1938 – நீல. பத்மநாபன், தமிழக எழுத்தாளர்

1953 – வில்லியம். ஈ. மோர்னர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர், இயற்பியலாளர்

1961 – இயன் கிளென், இசுக்கொட்டிய நடிகர்

1966 – விஜயசாந்தி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி

1968 – போரிசு கெல்பண்ட், உருசிய-இசுரேலிய சதுரங்க வீரர்

1974 – மது பாலகிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்

1979 – மிண்டி காலிங், அமெரிக்க நடிகை

1987 – லியோனல் மெசி, அர்ச்செந்தீனக் காற்பந்தாட்ட வீரர்

இன்றைய தின இறப்புகள்

1398 – கோங்வு சீனப் பேரரசர் (பி. 1328)

1564 – ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி (பி. 1524)

1908 – குரோவர் கிளீவ்லாண்ட், அமெரிக்காவின் 22வது, 24வது அரசுத்தலைவர் (பி. 1837)

1947 – தர்மானந்த தாமோதர் கோசாம்பி, இந்தியப் பௌத்தப் பேரறிஞர் (பி. 1876)

1957 – பிரான்டிசேக் குப்கா, செக் நாட்டு ஓவியர் (பி. 1871)

1963 – மரிய குவாதலூபே கார்சிய சவாலா, மெக்சிக்கோ புனிதர் (பி. 1878)

1980 – வி. வி. கிரி, இந்தியாவின் 4-வது குடியரசுத் தலைவர் (பி. 1894)

1992 – மகாராஜபுரம் சந்தானம், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1928)

2006 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், தமிழக எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் (பி. 1910)

2007 – கிறிஸ் பென்வா, கனடிய மற்போர் வீரர் (பி. 1967)

2008 – லியோனிடு ஹுர்விக்ஸ், நோபல் பரிசு பெற்ற உருசிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1917)

2020 – எஸ். நடராஜசிவம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நடிகர்