மே 27 கிரிகோரியன் ஆண்டின் 147 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 148 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 218 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1096 – மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.[1]

1153 – நான்காம் மால்கம் இசுக்கொட்லாந்தின் அரசராக முடி சூடினார்.

1199 – ஜோன் இங்கிலாந்தின் அரசராக முடி சூடினார்.

1703 – உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார்.

1799 – ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன.

1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் படைகள் கனடாவில் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றின.

1837 – இலங்கையில் கொழும்பு நகரில் வெள்ளப்பெருக்கினால் 2000 வரையான வீடுகள் நீரில் மூழ்கின, பாலங்கள் பல சேதமடைந்தன.[2]

1860 – இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தார்.

1883 – மூன்றாம் அலெக்சாந்தர் உருசியப் பேரரசராக முடி சூடினார்.

1896 – அமெரிக்காவின் மிசூரி, சென் லூயிசு, இலினொய் ஆகிய இடங்களில் சுழல் காற்று வீசியதில் 255 பேர் உயிரிழந்தனர்.

1930 – உலகின் உயரமான கட்டடமாக அந்நேரத்தில் கருதப்பட்ட 1046 அடி உயர கிரைசுலர் கட்டடம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது.

1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் டன்கேர்க் என்ற இடத்தில் செருமனியிடம் சரணடைந்த ஐக்கிய இராச்சியத்தின் நோர்போக் பிரிவைச் சேர்ந்த 99 பேரில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் “காலவரையறையற்ற தேசிய அவசரகால நிலையைப்” பிறப்பித்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின்யின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அத்திலாந்திக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: யூத இனவழிப்பின் முக்கிய அதிகாரி ரைன்கார்ட் ஏட்ரிச் பிராகா நகர சமரில் காயமடைந்தார். எட்டு நாட்களின் பின்னர் இவர் இறந்தார்.

1958 – இலங்கை இனக்கலவரம் 1958: இலங்கையின் மேற்கே பாணந்துறையில் சிங்களவர்களினால் இந்துக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டு, கோவில் பூசகர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.[3]

1958 – இலங்கை இனக்கலவரம் 1958: இலங்கை முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊடகத் தணிக்கை அறிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் தடை செய்யப்பட்டன.[3]

1958 – எப்-4 பன்டெம் II இன் முதலாவது பரப்பு இடம்பெற்றது.

1960 – துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் செலால் பயார் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1965 – வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தென் வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.

1967 – ஆத்திரேலியாவில் நடந்த பொது வாக்கெடுப்பில் பழங்குடிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கவும், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.

1971 – மேற்கு செருமனியில் நடந்த தொடருந்து விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.

1971 – கிழக்குப் பாக்கித்தானில் பக்பாத்தி நகரில் வங்காள இந்துக்கள் 200 பேரை பாக்கித்தானியப் படையினர் படுகொலை செய்தனர்.

1975 – இங்கிலாந்தில் டிபில்சு பாலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர்.

1980 – தென் கொரிய இராணுவம் குவாங்சு நகரை குடிப்படைகளிடம் இருந்து மீளக் கைப்பற்றியது. 207 பேர் கொல்லப்பட்டனர்.

1994 – சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாந்தர் சொல்செனித்சின் 20 ஆண்டுகளின் பின்னர் உருசியா திரும்பினார்.

1996 – உருசிய அரசுத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் செச்சினியக் கிளர்ச்சியாளர்களை]] முதல் தடவையாக சந்தித்து போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

1997 – முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2001 – இசுலாமியப் பிரிவினைவாதக் குழு அபு சயாப் போராளிகள் பிலிப்பீன்சு, பலவான் நகரில் 20 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இப்பிரச்சனை 2002 சூன் மாதத்திலேயே தீர்த்து வைக்கப்பட்டது.

2006 – இந்தோனேசியாவின் சாவகத் தீவில் நிகழ்ந்த 6.4 அளவு நிலநடுக்கத்தில் 5.700 பேர் வரை உயிரிழந்தனர், 37,000 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1332 – இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர், இறையியலாளர் (இ. 1406)

1761 – தோமஸ் முன்ரோ, பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ அதிகாரி, சென்னை மாகாண ஆளுநர் (இ. 1827)

1897 – ஜான் கொக்ரொஃப்ட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1967)

1907 – ரேச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியலாளர், நூலாசிரியர் (இ. 1964)

1909 – டபிள்யு. டபிள்யு. ஹேன்சன், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1949)

1916 – ச. ராஜாபாதர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி (இ. 1986)

1923 – ஹென்றி கிசிஞ்சர், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க அரசியல்வாதி

1928 – பிபன் சந்திரா, இந்திய அரசியல், பொருளாதார வரலாற்று அறிஞர் (இ. 2014)

1931 – ஓ. என். வி. குறுப்பு, மலையாளக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (இ. 2016)

1935 – தினேசு கோசுவாமி, இந்திய அரசியல்வாதி (இ. 1991)

1938 – பாலச்சந்திர நெமதே, மராட்டியப் புதின ஆசிரியர், கவிஞர், கல்வியாளர்

1954 – லோரன்சு எம். குரோசு, கனடிய-அமெரிக்க இயற்பியல் கோட்பாட்டாளர், அண்டவியலாளர்

1957 – நிதின் கட்காரி, இந்திய அரசியல்வாதி

1960 – வினோதன் ஜோன், இலங்கை துடுப்பாட்ட வீரர்

1962 – ரவி சாஸ்திரி, இந்தியத் துடுப்பாட்ட வீரர்

1975 – பெர்யால் ஓசல், துருக்கிய வானியற்பியலாளர், வானியலாளர்

1977 – மகேல ஜயவர்தன, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இன்றைய தின இறப்புகள்

1564 – ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர், மதகுரு (பி. 1509)

1840 – நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய வயனின் இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி. 1782)

1910 – ராபர்ட் கோக், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (பி. 1843)

1919 – கந்துகூரி வீரேசலிங்கம், இந்திய நூலாசிரியர், செயற்பாட்டாளர் (பி. 1848)

1964 – ஜவகர்லால் நேரு, இந்தியாவின் 1வது பிரதமர் (பி. 1889)

1981 – க. இரா. ஜமதக்னி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மார்க்சிய சிந்தனையாளர், நூலாசிரியர் (பி. 1903)

1988 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1906)

1998 – மினூ மசானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1905)

இன்றைய தின சிறப்பு நாள்

சிறுவர் நாள் (நைஜீரியா)

அன்னையர் நாள் (பொலீவியா)

அடிமை ஒழிப்பு நாள் (குவாதலூப்பே, செயிண்ட்-பார்த்தலெமி, சென் மார்ட்டின்)