அண்மையில் ஒரு மிகப் பெரிய மலைப்பாம்புடன் சிறுவன் விளையாடும் வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவன் பாம்பிடம் சிக்கிக் கொண்டுள்ளது போன்று தோன்றுகிறது. எனினும்  அந்த சிறுவன் தான் பாம்பை வம்புக்கு இழுக்கிறான் என்பது பிறகு புரிகிறது.

ஒருக் கட்டத்தில் பாம்பு சிறுவனை சுற்றி வளைத்துக்கொள்கிறது. இருப்பினும் அந்த சிறுவன் கத்திக்கொண்டே அதன் பிடியிலிருந்து விடுபடுகிறான். அதன்பின் சிறுவன் அதை கையால் எடுத்து பாடாய் படுத்துகிறான். இது பார்ப்பவர்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது.