சனவரி 19  கிரிகோரியன் ஆண்டின் 19 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 346 (நெட்டாண்டுகளில் 347) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

379 – பேரரசர் கிராத்தியான் உரோமைப் பேரரசின் கிழக்கு மாகானங்களுக்குப் பொறுப்பாக பிளாவியசு தியோடோசியசை நியமித்தார்.[1]

1419 – நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியிடம் பிரான்சின் ரொவென் நகரம் சரணடைந்தது.

1511 – இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின.[2]

1661 – பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.

1764 – உலகின் முதலாவது அஞ்சல் குண்டுவெடிப்பு டென்மார்க் இராணுவத் தலைவர் போல்சனைப் படுகாயப்படுத்தியது.

1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை வந்தடைந்தது.

1795 – நெதர்லாந்தில் பத்தாவியக் குடியரசு அறிவிக்கப்பட்டதை அடுத்து இடச்சுக் குடியரசு முடிவுக்கு வந்தது.

1806 – நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.

1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து ஆன்டெசைக் கடந்தது.

1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் அகஸ்டின் பிரெனெல் முனைவுற்ற ஒளியைப் பற்றிய விளக்கத்தை அறிவித்தார்.

1839 – பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடன் நகரைக் கைப்பற்றியது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜோர்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மில் ஸ்பிரிங்ஸ் சண்டையில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தனது முதல் பெரிய தோல்வியை சந்தித்தது.

1867 – பிரித்தானிய இலங்கையில் பால்க்னர் என்பவரைக் கொன்ற குற்றத்திற்காக கல்யாண் கங்காணி என்பவர் தூக்கிலிடப்பட்டார்.[3]

1871 – பாரிசு முற்றுகையின் போது, புருசியா புனித குவென்டின் சமரை வென்றது.

1883 – முதலாவது மேலே செல்லும் கம்பி வலையமைப்புபைக் கொண்ட மின்னொளி அமைப்பு எடிசனால் நியூ செர்சியில் அமைக்கப்பட்டது.

1899 – ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.

1903 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.

1917 – லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.

1920 – அமெரிக்க மேலவை உலக நாடுகள் சங்கத்தில் சேருவதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது.

1927 – பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.

1937 – அவார்டு இயூசு லாஸ் ஏஞ்சலஸ் இலிருந்து நியூ யார்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 நொடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கின.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டன.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்துல் நாட்சிகளின் லோட்சு வதைமுகாமில் இருந்து யூதக் கைதிகளை விடுவித்தன.

1946 – சப்பானியப் போர்க்குற்றவாளிகளை விசாரிப்பதற்கென டக்ளசு மக்கார்த்தர் தோக்கியோவில் தூரகிழக்கிற்கான பன்னாட்டு இராணுவ நீதிமன்றத்தை அமைத்தார்.

1966 – இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1981 – ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1983 – ஆப்பிள் நிறுவனத்தின் வரைகலை பயனர் இடைமுகம் மற்றும் சுட்டியுடனான முதலாவது வணிக-முறை தனி மேசைக் கணினி ஆப்பிள் லீசா” வெளியிடப்பட்டது.

1983 – நாட்சி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டார்.

1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.

1991 – வளைகுடாப் போர்: ஈராக்கு இரண்டாவது ஸ்கட் ஏவுகணையை இசுரேல் மீது ஏவியது. 15 பேர் காயமடைந்தனர்.

1993 – செக் குடியரசு, சிலோவாக்கியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தன.

1993 – வேதி ஆயுத உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது.

1993 – ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் $4.97 பில்லியன் நட்டத்தை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வேறொரு நிறுவனம் இந்த அளவில் நட்டம் அடைந்ததில்லை.

1997 – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் எபிரோன் திரும்பினார்.

2006 – சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் அங்கேரியில் வீழ்ந்து நொறுங்கியது.

2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.

2007 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.

இன்றைய தின பிறப்புகள்

1736 – ஜேம்ஸ் வாட், இசுக்கொட்டிய-ஆங்கிலேய வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1819)

1798 – ஆகஸ்ட் கோம்ட், பிரான்சிய மெய்யியாலாளர். சமூகவியலாளர் (இ. 1859)

1807 – ராபர்ட் ஈ. லீ, அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1870)

1809 – எட்கர் ஆலன் போ, அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர் (இ. 1849)

1839 – பால் செசான், பிரான்சிய ஓவியர் (இ. 1906)

1851 – யாகோபசு காப்தேயன், இடச்சு வானியலாளர் (இ. 1922)

1855 – ஜி. சுப்பிரமணிய ஐயர், தமிழக இதழியலாளர் (இ. 1916)

1898 – வி. ச. காண்டேகர், மராத்திய எழுத்தாளர் (இ. 1976)

1931 – யசூசி அகாசி, சப்பானிய மூத்த தூதர், ஐநா நிருவாகி

1933 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)

1935 – சௌமித்திர சாட்டர்ஜி, இந்திய வங்காள நடிகர் (இ. 2020)

1937 – அ. முத்துலிங்கம், இலங்கை-கனடிய தமிழ் எழுத்தாளர்

1946 – யூலியன் பார்னசு, ஆங்கிலேய எழுத்தாளர்

1948 – நான்சி லின்ச், அமெரிக்கக் கணினி அறிவியலாளர்

1980 – மைக்கல் வென்டாட், இலங்கைத் துடுப்பாளர்

1986 – ரீமா கல்லிங்கல், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1992 – லோகன் லெர்மன், அமெரிக்க நடிகர்

இன்றைய தின இறப்புகள்

1597 – மகாராணா பிரதாப், இந்திய மன்னர் (பி. 1540)

1873 – மீட் ஐயர், தமிழ்நாட்டில் மதப்பரப்புரை செய்த ஆங்கிலேய போதகர் (பி. 1792)

1888 – சி. தியாகராச செட்டியார், தமிழறிஞர் (பி. 1826)

1905 – தேபேந்திரநாத் தாகூர், இந்திய மெய்யியலாளர் (பி. 1817)

1941 – நேசம் சரவணமுத்து, இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் (பி. 1897)

1967 – மைசூர் டி. சௌடையா, இந்தியக் கருநாடக வயலின் கலைஞர் (பி. 1895)

1990 – ஓஷோ, இந்திய மதகுரு, மெய்யியலாளர் (பி. 1931)

1991 – பால் வெயிஸ், செருமனிய-பிரித்தானிய கணித, கோட்பாட்டு இயற்பியலாளர் (பி. 1911)

2000 – மு. அ. சிதம்பரம், தமிழகத் தொழிலதிபர் (பி. 1918)

2000 – எடி இலமார், ஆத்திரிய-அமெரிக்க நடிகை, பாடகி, கணிதவியலாளர் (பி. 1913)

2008 – பிரான்செஸ் லிவைன், அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1921)

2011 – தாமரைக்கண்ணன், தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், நூல் மதிப்புரையாளர் (பி. 1934)

2014 – எஸ். ஜெ. தம்பையா, இலங்கை-அமெரிக்க மானிடவியலாளர், கல்வியாளர் (பி. 1929)

2015 – ரஜினி கோத்தாரி, இந்திய அரசியல் அறிஞர் (பி. 1928)

2016 – எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா, இலங்கை அரசியல்வாதி (பி. 1947)

2019 – அதீன் பந்த்யோபாத்யாய, வங்காளதேச எழுத்தாளர் (பி. 1934)

2021 – வி. சாந்தா, இந்தியப் புற்றுநோய் மருத்துவ நிபுணர் (பி. 1927)

2022 – ரத்னா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1947)

இன்றைய தின சிறப்பு நாள்

இயேசுவின் திருமுழுக்கு (மாக்கடோனியக் குடியரசு)

கொக்பொரோக் நாள் (திரிபுரா, இந்தியா)