வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 2,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களில், பூங்காவிற்கு வார இறுதி மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,000 பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.

வார இறுதியில் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறை வருகை- ஐ விட அதிகமாகும். வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வார இறுதி நாட்களில் இன்னும் கூடுதலான எண்ணிக்கையை எதிர்பார்க்கும் பூங்கா அதிகாரிகள், பார்வையாளர்களின் கூடுதலான எண்ணிக்கையை சமாளிக்கும் விதமாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அதற்கேற்ற தயாரிப்பு பணிகள் சரியாக உள்ளதா ? என உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.