தில்ராஜு தெலுங்கு திரையுலகில் டாப் தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவர் தமிழில் விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு திரைப்படத்தை தயாரித்திருந்தார். வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் குவித்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ரிசல்ட்டை பார்த்து தளபதி விஜய் என்ன சொன்னார் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் தில்ராஜு டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதாவது, வாரிசு பொங்கல் வின்னர் என குறிப்பிட்டிருக்கும் அவர், விஜய் இதனால் அதிகம் மகிழ்ச்சியானார் என கூறி இருக்கிறார்.