கடந்த 1948&ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சாசனம் 1945-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. உலக அமைதி மற்றும் சமத்துவத்தை நோக்கி செயல்படும் ஒரு உலகளாவிய நிறுவனம் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு. இது அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 24-ஆம் தேதி 1945 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் ஐக்கிய நாடுகள் என்ற பெயரை உருவாக்கினார்.

இதனை தொடர்ந்து 1971-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அந்த நாளை பொது விடுமுறை தினமாக உறுப்பு நாடுகளால் அனுசரிக்க பரிந்துரை செய்தது. இந்த சாசனம் 1945 ஜூன் 26 அன்று 50 நாடுகளின் பிரதிநிதிகளால் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டது. இதனையடுத்து மாநாட்டில் பிரதிநிதித்துவம் செய்யப்படாத போலந்து பின்னர் கையெழுத்திட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை 51 ஆக மாறியது. தற்போது 193 உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளது.

ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் பொது நியூயார்க்கில் இருக்கும் தலைமையகத்தில் அமைப்பின் பொது சமய மண்டபத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தில் ஆண்டு விழாவினை அக்டோபர் மாதம் 24&ஆம் தேதி அன்றைய நாளை ஐக்கிய நாடுகள் தினமாக கொண்டாட வலியுறுத்தியது.

உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம் சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் தினம் அன்று உலக மக்களுடைய ஐநாவின் நோக்கங்கள், சாதனைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு கருத்தரங்கங்கள், பல சந்திப்புகள், கண்காட்சிகள், பன்னாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 20 முதல் 26 ஆம் தேதி வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.