பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை விட்டு விலகி பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 2 பட குழுவினர் தற்போது ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது நிருபர் ஒருவர்  இயக்குனர் மணிரத்னத்திடம் நடிகை ஐஸ்வர்யா ராய் உங்களுக்கு அதிர்ஷ்டமான நடிகையாக என்ற கேள்வி எழுப்பினார்.

அதற்கு மணிரத்தினம் திரைப்பட இயக்குனர்கள் மிகவும் சுயநலவாதிகள். நான் ஐஸ்வர்யாவை எவ்வளவு நேசித்தாலும் எனது படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று எனக்கு தோன்றினால் தான் அவரிடம் நடிக்க கேட்பேன். நான் கேட்டால் ஐஸ்வர்யா உடனே சம்மதித்து விடுவார் என்று கூறினார். இதைக் கேட்ட உடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மணிரத்தினத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். மேலும் கடந்த 1997-ம் ஆண்டு மணிரத்தினம் இயககிய இருவர் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.