தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் சிட்டிபாபு. இவர் நடிகை சமந்தாவை அண்மையில் விமர்சித்து பேசி இருந்தார். அதாவது சமந்தாவின் சாகுந்தலம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் வெறும் 10 கோடி மட்டும் தான் வசூல் சாதனை புரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வைத்து தயாரிப்பாளர் சிட்டிபாபு சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு பொருத்தம் இல்லாத சமந்தாவை எப்படி தேர்வு செய்தார்கள். அவருடைய நோய் எல்லாம் பொய். தனக்கு நோய் இருப்பதாக கூறி அனுதாபத்துடன் படங்களை விளம்பரப்படுத்தி வருகிறார். கதாநாயகி அந்தஸ்தை சமந்தா இழந்துவிட்டார்.

படங்களை ஓட வைப்பதற்காக உடல் நிலையை காரணம் காட்டி மலிவான விளம்பரத்தை செய்கிறார் என விமர்சித்திருந்தார். இதற்கு நடிகை சமந்தா காது மடலில் அதிகமாக முடி வளர்ந்து இருக்கும் நபர்களுக்கு ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது என்று கூகுளில் தேடினேன் என்று பதிவிட்டிருந்தார். அந்த நபர் யார் என்பது உங்களுக்கு தெரியும் என தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு சமந்தா பதிலடி கொடுத்திருந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் சிட்டிபாபு மீண்டும் சமந்தாவை விமர்சித்துள்ளார். அவர் என் காதில் உள்ள முடியை பற்றி பேசாமல் என் வார்த்தையில் உள்ள நேர்மையை பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும் என்று கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் சிட்டிபாபுவின் பேச்சுக்கு சமந்தா பதிலடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.