TTV தினகரனின் சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, OPS குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் விரக்தியின் விளம்பிற்கு போய்க்கொண்டிருப்பதால் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. முதலில் தர்மயுத்தம் என்றார். இப்போது மீண்டும் மற்றொரு தர்ம யுத்தம் என்கிறார். அவருடைய திறமை எத்தனை எல்லாம் என்ன ஆனது என்று அவரை சுற்றியுள்ளவர்களுக்கு தெரியும்.

அடுத்ததாக அதிமுகவினருடைய சொத்து பட்டியலை வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,’அதிமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என தினகரன் கூறியிருக்கிறார். முதலில் லண்டன் வரை சொத்து குவித்துள்ள TTV தினகரனின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும். அவருடைய சொத்துக்களை கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும். அது தான் சரியாக இருக்கும்.’ என்றார்.