தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெற்று வருகின்றது. இதில் 191 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு தொடர்பு உண்டு. இதில் விருப்பமும் தகுதியும் உடையவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.