திபெத் பிரதேசத்தில் உண்டான பனிச்சரிவில், மாட்டி எட்டு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத் பிரதேசத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நியிஞ்சி என்ற நகரை மெடாக் கவுண்டியுடன் சேர்க்கும் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த 17-ஆம் தேதி அன்று திடீரென்று பனிச்சரிவு உண்டானது. வாகனங்கள் மீது பனிகள் போர்வை போன்று மூடி காணப்பட்டது.

இந்த பனிச்சரிவில் சிக்கி 8 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மீட்பு படையினர் தேடுதல் பணியை மேற்கொண்டனர். பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியில், மீட்பு படையினர் 131 பேரும், அவசரகால வாகனங்களும், தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.