கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுபாக்கம் பகுதியில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாவதி, அலெக்ஸ் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் கையில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் மாரியப்பன் என்பது தெரியவந்தது.

இவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியுடன் சென்று கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் கணேசன் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.