கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் மந்திவிளை பகுதியில் ராஜையன் (76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜையன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு நேற்று காலை வீட்டிற்கு முன்பு இருக்கும் தண்ணீர் தொட்டியில் ராஜையன் சடலமாக கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜையனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நள்ளிரவு நேரத்தில் வெளியே வந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ராஜையன் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.