விழுப்புரத்தில் உள்ள இருவேல்பட்டு அருகே கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனை பார்வையிட பொன்முடி சென்றிருந்தார். அப்போது அவர் மீது சேர் வீசப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி அவர், சேற்றை வாரி இறைக்க நம் ஆட்கள் விட்டு விடுவார்களா?, நாங்கள் சென்ற பிறகு என் பின்னாலிருந்து சேற்றை அள்ளி வீசி இருக்கிறார்கள். அதன் பிறகு நான் என் தொகுதி மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டேன்.

எந்த பணியும் தடைப்படவில்லை. சிலர் இந்த காரியத்தை அரசியலுக்காக செய்கின்றனர். அதை பெரிதுப்படுத்தி நானும் அரசியலாக்க விரும்பவில்லை. வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வது தான் எங்கள் நோக்கம், அதை தவிர அரசியல் செய்யும் நோக்கம் எங்களுக்கு கிடையாது. நிவாரண நிதியை அதிகரிக்க அண்ணாமலை சொல்ல வேண்டிய இடத்தில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.