பதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்த சிலர் சும்மா குறைப்பவர் தானே, கடிக்க மாட்டார்கள் என நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் மிகச் சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் காட்டாதவர். அண்மையில் திருவனந்தபுரத்தில் நடந்த மாத்ருபூமிஸ் சர்வதேச கடித திருவிழாவில் கலந்து கொண்ட அவர் நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் குறித்து பேசினார்.

அப்பொழுது பேசிய அவர் பதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் சிலர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் இத்தகைய நபர்கள் சும்மா குறைப்பவர்கள் மட்டும்தான் எனவும் இவர்கள் கடிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் பதான் திரைப்படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதை சுட்டிக்காட்டிய பிரகாஷ்ராஜ் இந்த திரைப்படத்தை எதிர்த்தவர்களால் பிரதமர் நரேந்திர மோடி படத்திற்கு 30 கோடி வசூல் கூட செய்ய முடியவில்லை எனவும் அவர்களும் ஒருவித ஒலி மாசுபாடு தான் எனது விமர்சித்தார்.

பதான் திரைப்படத்தில் இடம் பெற்ற தேசாராம் ரன் பாடல் சர்ச்சையில் சிக்கி பல விமர்சனங்களை சந்தித்த நேரத்திலேயே பதான் பாடலுக்கு எதிரான கருத்துகளுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரகாஷ்ராஜின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.