ஆடை இல்லாமல் புகைப்படம் பிரசுரிக்க அனுமதித்த நடிகை ஷெர்லின் சோப்ரா, தினசரி கிறங்கடிக்கும் கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு கட்டுக்கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையான ராக்கிசாவந்த் மற்றும் பிரபல இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா இருவருக்கும் இடையில் அண்மையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சமரசமாகி ஒன்று சேர்ந்து உள்ளனர்.

இந்நிலையில் தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்தாக ஷெர்லின் சோப்ரா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதாவது, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான சுனில் பரஸ்மானி லோதா தன்னிடம் மோசமாக நடந்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். உன்னை பார்த்தால் தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நீ மிகவும் கவர்ச்சியாக இருக்கிறாய் என தொழிலதிபர் கூறினார். இப்போது ஷெர்லின் புகாரின் படி தொழிலதிபர் மீது 3 பிரிவுகளீன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.