தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோயினாக ஜொலிப்பவர் பிரியா பவானி சங்கர். அவர் நேற்று தன்னுடைய டிவி பயணத்தை தொடங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு இருந்தார். அப்போது பெரிய நடிகையாக மாறுவதற்காக பெரிய அளவில் செலவு செய்ததாக கூறியிருந்தார்கள். இதன் காரணமாக நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதோடு நான் அழகாக தெரிவதற்கு 10 பேர் வேலை செய்கிறார்கள். ஒரு நடிகை என்றால் ஸ்கின் கேர் மற்றும் லைஃப் ஸ்டைல் போன்றவைக்காக அதிகம் செலவு செய்வார்கள். அதை ஒரு சாதாரண பெண் செய்ய முடியாது. இன்ஸ்டாகிராமில் நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள் எல்லாம் உண்மை கிடையாது. அது அவர்களின் தொழில். அதனால் எப்போதும் அழுத்தத்துடன் இருக்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.