பாலிவுட்டில் 90 காலக்கட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் கோவிந்தா. இவர் நடன அசைவுகளுக்காக ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்த நிலையில் சகநடிகரான வினய் பதக் என்பவருடன் நடிகர் கோவிந்தா மற்றும் அவரது சகோதரர் கீர்த்தி இருவரும் விவாதித்தனர். அப்போது கோவிந்தா மற்றும் சகோதரர் கீர்த்தி இரண்டு பேரும் சேர்ந்து பேட்டியளித்தபோது, “தங்களது குடும்பம் பெரிய வறுமையில் சிக்கித் தவித்தது. அதிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே தன் விருப்பம் என கீர்த்தி கூறி உள்ளார்.

திரைத்துறையில் கோவிந்தா தன் பாதையை அவராகவே வகுத்துக்கொண்டார். அவர் திரை பயணத்தை துவங்கியபோது, அவரது செயலாளர் பொறுப்பை ஏற்றுகொண்டேன். அப்போது பல்வேறு படங்களில் அவரை ஒப்பந்தம் போட வைத்தேன். ஒருநாள் நாங்கள் இருந்த அறையை கோவிந்தா மூடிவிட்டார். நிறைய பணம் அவருடைய வங்கிக் கணக்குகள் அனைத்தையும் எடுத்து வந்து கொட்டினார்.

எனினும் அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்வது என நாங்கள் யோசிதோம். இதனிடையே கோவிந்தா உடனே தன்னிடம் வந்து பப்பு இவ்வளவு பணம் இருக்கிறது, என்ன செய்யலாம்? என கூறினார். 100 ஆட்டோ ரிக்சா வாங்குவோம் என தெரிவித்தார். இருப்பினும் அது நமது தொழில் இல்லை என்று நான் கூறினேன். அதனை தொடர்ந்து அவர் பெரிய நட்சத்திர நடிகரானார். அதன்பிறகும் இவ்வளவு தொகையை வைத்து நாம் என்ன செய்யலாம் என நாங்கள் வியந்துபோனோம் என கூறினர்.