
இந்தியாவின் தேசியப்பழம் என அழைக்கப்படும் மாம்பழ பரிசோதனைக்கு பெயர் போனவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கலிமுல்லாகான். இவர் இந்தியாவின் “மாம்பழ மனிதன்” என அழைக்கப்படுகிறார்.
தனது சிறு வயது முதலே மாம்பழங்கள் குறித்த பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் லக்னோவில் உள்ள மாலிகாபாத்தில் கலிமுல்லா அவரது மாம்பழத் தோட்டத்தில் தனித்துவமான ஒட்டு நுட்பத்தை பயன்படுத்தி புதிய வகை மாம்பழத்தை உருவாக்கியுள்ளார்.
மேலும் அந்த மாம்பழத்திற்கு இந்தியாவின் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பெயரை சூட்டி உள்ளார். அதாவது அந்த புதிய வகை மாம்பழத்திற்கு “ராஜ்நாத் ஆம்” என அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவர் ஏற்கனவே தனது மாம்பழ வகைகளுக்கு இந்தியாவின் முக்கியமான பிரமுகர்களான நரேந்திர மோடி, அமித்ஷா, அகிலேஷ் யாதவ், சோனியா காந்தி, ஐஸ்வர்யா ராய், சச்சின் டெண்டுல்கர் போன்றோரின் பெயர்களை சூட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கலிமுல்லாகான் தோட்டக்கலை மற்றும் பழம் வளர்ப்பில் ஆற்றிய பங்களிப்பு களுக்காக பத்மஸ்ரீ விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டவர்.
தற்போது மாம்பழத்திற்கு பாதுகாப்பு மந்திரி பெயர் சூட்டியது குறித்து கலிமுல்லாகான் கூறியதாவது, “இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் சேவை செய்தவர்களின் பெயர்களை எனது மாம்பழங்களுக்கு சூட்டுகிறேன். ஏனெனில் அந்தப் பெயர்கள் தலைமுறை தலைமுறையாக நிலைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.