நடிகர் பிரசாந்த் வாழ்க்கை தலைகீழாக மாறியதற்கு காரணம் இதுதான் என அவரின் தந்தை கூறியுள்ளார்.

90களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிரசாந்த். சினிமாவில் உச்சத்தில் இருந்த இவர் திடீரென தனது மார்க்கெட்டை இழந்து எப்படி என்பதற்கான காரணம் வெளியாகி உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் பிரசாந்தின் திருமணம் என கூறப்படுகின்றது. இவருக்கு கிரகலட்சுமி என்பவருடன் சென்ற 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பிறகு தான் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது பிரசாந்தின் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.

இதனால் இவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட சென்ற 2009 ஆம் வருடம் கிரகலட்சுமியை பிரசாந்த் விவாகரத்து செய்தார். இதனால் இவர்களின் குடும்பம் மனம் உடைந்தனர். இதனால்தான் பிரசாந்த் சினிமாவில் சரியாக கான்சென்ரேட் செய்ய முடியாமல் அவரின் சினிமா வாழ்க்கை தலைகீழாக மாற முக்கிய காரணம் என பிரசாந்தின் அப்பாவான நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் சிவானந்தம் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது வைரலாகி வருகின்றது.