இப்போது சிறுத்தை சிவா இயக்கும் தன் 42-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 13 மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் சரித்திர காலக்கட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். இப்படத்தை முடித்ததும் மார்ச் மாதத்துக்கு பின் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எனினும் முதற்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்ற பின் அடுத்த கட்ட சூட்டிங்கை தொடங்குவதற்கு முன்பு சில மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளப் போகிறாராம் வெற்றிமாறன்.

இதன் காரணமாக அவர் இடைவெளி கொடுக்கும் அந்த 2 மாதங்களில் ஏற்கனவே தன்னை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்டு செய்யும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா. அந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இரண்டே மாதத்தில் கேப் விடாமல் நடித்து கொடுத்துவிட்டு, பின் மீண்டும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க சூர்யா திட்டமிட்டிருப்பதாக ஒரு புது தகவல் வெளியாகி உள்ளது.