மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் பல்வேறு விதமான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளிவந்துள்ளது. அதன்படி ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களில் 47 கோடிக்கும் அதிகமானோருக்கு இந்த பலன் கிடைக்கும்.

ஆனால் இந்த பணத்தை பெறுவதற்கு நீங்கள் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். இந்த கணக்கை 10 வயதுக்கு மேல் உள்ளவர்கள் திறக்கலாம். அதன்பிறகு உங்களிடம் ஏற்கனவே கணக்கு இருந்தால் அதை ஜன்தன் கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இந்த கணக்கை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் தொடங்கலாம். இந்த திட்டத்தில் உங்கள் மாத வருமானம் 15 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் மட்டும்தான் பயன்பெற முடியும். மேலும் அமைப்பு சாரா துறையில் இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறார்கள்.