இந்திய ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்ற செய்திகள் சமீப காலமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. இதனுடன் சில நிறுவனங்களும் தனியார் ‌ வசம் ஒப்படைக்கப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்ட பிறகு இந்திய ரயில்வே துறையும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்ற செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் மற்றொரு முறை தெளிவாக கூறுகிறோம். இந்திய ரயில்வே துறை எந்த காரணத்தை கொண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது. அதுபோன்ற எந்த ஐடியாவும் தற்போதைக்கு இல்லை. மேலும் இந்திய ரயில்வேயில் பல திட்டங்கள் பயணிகளின் வசதிக்காக கொண்டு வரப்பட இருக்கிறது என்று கூறினார்.