திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் வாயிலாக தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதை தடுக்க தேவஸ்தான நிர்வானமானது பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் வாயிலாக லட்டு பிரசாதம் வாங்குவது, தங்கும் அறைகளை பெறுவது போன்றவற்றுக்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்து உள்ளனர் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். திருப்பதிக்கு வரும் பக்தர் ஒருவர் அதிகமான டோக்கன்கள் வாங்குவதை தடுப்பதற்காக புது தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

வருகிற மார்ச் 1ம் தேதி முதல் திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு முகம் அடையாளம் காணும் முறையானது அறிமுகப்படுத்தப்படும். திருமலை கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் தங்கும் வசதி குறித்து தற்போதுள்ள அமைப்பில் இருக்கும் ஓட்டைகளை நீக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.