மத்தியபிரதேசம் ஷிவ்புரியை சேர்ந்த ஒரு நபருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் முதலிரவு அன்று தம்பதியினர் தனிமையில் இருந்தபோது, மணமகன் மணப்பெண்ணின் வயிற்று பகுதியில் தையல் போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஏன் வயிற்றில் இத்தனை தையல் போடப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். உடனே மணமகள் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் உண்மையில் தன் மனைவி ஏற்கனவே ஒருவரை காதலித்ததும் அந்நபர் மூலம் கர்ப்பமடைந்த நிலையில், 3 மாதத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சை வாயிலாக கருவை கலைத்தது அவருக்கு தெரியவந்தது. இவற்றையெல்லாம் மறைத்து பெண் வீட்டார் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இதுகுறித்த தகவல்களை மருத்துவமனைக்கு சென்று அந்த மணமகன் உறுதிப்படுத்தினார். பின் மணமகன் தன் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.