ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஹரிசந்தன்பூர் பஜாரில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று காலையில் 4 திருடர்கள் ஹெல்மெட் அணிந்து நகைக்கடக்குள் புகுந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து நகை கடைக்குள் புகுந்த 4 திருடர்களும் துப்பாக்கியை காட்டி கடையின் உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளரை மிரட்டி அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

 

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.