
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே… அவர்களை கைது செய்வது….. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை திமுகவை சார்ந்தவர்களும் , மற்றவர்களும் சோசியல் மீடியாவில் விமர்சனம் செய்கின்றார்கள். பல கம்ப்ளைன்ட், பல புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆனால் அதற்கு மாறாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் முகநூலில் பதிவிட்டால் கூட அவர்களின் பேச்சுரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்து, சிறைக்கு அனுப்பி கொண்டிருக்கின்ற இந்த திராவிட முன்னேற்றக் கழகம் இப்பொழுது அதற்கு அடுத்ததாக ஒரு படி மேலே சென்று பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி உள்ளது.
இது மேற்கு வங்காளத்தில் இதுபோன்ற தாக்குதல் நடந்தது. மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மிகப்பெரிய எழுச்சி வந்தது. இப்பொழுது இங்கு திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுடைய நிர்வாகிகளை தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை கொடுக்கும். எங்களுடைய தலைவர் அவர்கள் இந்த குழு அமைத்திருக்கிறார்கள். அந்த குழு விரைவில் இங்கு வர இருக்கிறது என தெரிவித்தார்.