
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கூடுதலாக தொகுதிகளைக் கேட்போம் என்று நீங்கள் கேட்கும் கேள்விக்கு நாங்கள் பதில் அளிக்கிறோம். செய்தியாளர்கள் தொடர்ந்து இந்த கேள்வியை எழுப்பி வரும் நிலையில், இல்லை இல்லை நாங்கள் 6 கொடுத்தாலும் பெற்றுக்கொள்வோம். அதை விட குறைவாக கொடுத்தாலும் பெற்றுக் கொள்வோம் என்று கூற முடியாது.
எங்களுக்கு கூடுதலான இடம் வேண்டும் என்று ஒவ்வொரு தேர்தலிலும் கேட்கிறோம். ஒரு கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டும். அந்த வகையில் கூட்டணிகளை தலைமை தாங்குகிற திமுக தலைவர் எங்களுடன் உரையாடலில் ஈடுபடும்போது நாங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கூட்டணியை கருத்தில் கொண்டு, வெற்றியை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம். அது பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்படும் என்று கூறினார். மேலும் திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேற வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.