ஒடிசாவில் காதலர்கள் தினமான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் கட்டாயம் ஒரு பாய்பிரண்ட் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் போலி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நோட்டீஸ் பலகையின் மேல் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோட்டீஸில் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு பாய் ப்ரெண்ட் கட்டாயமாக வைத்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பாய் பிரண்ட் இல்லாமல் தனியாக வரும் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் நுழைய அனுமதி இல்லை எனவும் மாணவிகள் தங்கள் பாய் பிரண்டுடன் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை காட்ட வேண்டும், அன்பை பரப்புங்கள் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து ஆசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் தகவல் கொடுத்த நிலையில் தனது கையெழுத்தை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர் என தனது கையெழுத்துடன் போலியான நோட்டீஸ் ஒட்டியுள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.