உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பட்ட கொடூர விபத்தில் 3 பேர் பலியாகினர். ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மேலும் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. NDRF, SDRF வீரர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று மதியம் ஏற்பட்ட நில அதிர்வால் கட்டடம் சேதமடைந்திருக்கிறது.