தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் நிறைவு பெற்றது. இந்த சீசனில் அசீம் வெற்றி பெற்றார். பிக்பாஸ் முடிந்து மூன்று வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் போட்டியாளர்கள் மத்தியிலான பஞ்சாயத்துகள் இன்னும் தீரவில்லை. இந்த நிலையில் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்ற விஜே மகேஸ்வரி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கின்றார். அதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

மகேஸ்வரியை  அசீம் ஆர்மி என கூறப்படுபவர்கள் சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் மிக மோசமான கமெண்ட்டுகள் குவிய ஆரம்பித்த நிலையில் மகேஸ்வரி மகன் குறித்தும் எல்லை மீறிய கமெண்டுகள் பதிவிட ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் மகேஸ்வரி தனது மகனை கட்டிப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒரு போராளியாக இருப்பதற்கு நன்றி. என் மகனே நச்சு ஆண்மை நிறைந்த இந்த உலகத்தை நீ பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப் போகிறாய் என நம்புகின்றேன். நீ மாற்றமாக இருப்பாய். அதற்காக நான் பெருமைப்படுகின்றேன். அம்மா உன்னை பாதுகாப்பேன் என தெரிவித்ததோடு மோசமான கமெண்ட்களை பதிவிடுபவர்கள் மீது சட்டபூர்வமாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.