90களில் பலருக்கும் பிடித்த நடிகையாக ஜோதிகா இருந்துள்ளார். மும்பையை சேர்ந்த ஜோதிகா முதலில் ஹிந்தியில் தான் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் 1999 ஆம் ஆண்டு வாலி படம் வழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது இயல்பான நடிப்பை வாலி திரைப்படத்தில் வெளிப்படுத்தியதால் மக்களின் பாராட்டுகளை பெற்றார். பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் முதல்முறையாக பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்தார். முதலில் நண்பர்களாக இருந்த இவர்கள் பின்னர் காதலர்களாக மாறினார்கள். இதனை தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஜோதிகா தங்களது குழந்தைகளுக்காக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். எனவே திடீரென தனது மகள் மட்டும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. மேலும் அம்மா ஜோதிகாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஹீரோயின் போல் இருக்கும் தியா கையில் நாய்க்குட்டி ஒன்றை வைத்து எடுத்துள்ள போட்டோ வைரலாகியுள்ளது. மேலும் பலர் ஜோதிகா அவர்களின் மகளைப் பார்த்து ஹீரோயின் போல் மிக அழகாக இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.