பிரபல இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி தற்போது மைக்கேல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 3-ஆம் தேதி ரிலீசான நிலையில் உலகம் முழுவதும் 9.7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. மற்ற படங்களை போன்று மைக்கேல் திரைப்படமும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்றுதான். அனைவரையும் திருப்தி படுத்த கூடிய படைப்பு என்று ஒன்றுமே இல்லை. என்னுடைய 100 சதவீதம் உழைப்பையும் இப்படத்தில் போட்டிருக்கிறேன். ஒவ்வொருவரது ரசனையும் மாறுபடும் நிலையில் மைக்கேல் படத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நன்றி. மேலும் அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக நான் உழைக்க தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.