தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பிலிருந்து வெளிநாட்டிலிருந்து வேலை பார்த்து அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். பிகாம் பட்டதாரியான இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த எம் ஏ மற்றும் பி.எட் படித்த சந்தன மாரியம்மன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமண நடந்துள்ளது.

இந்த நிலையில் மனைவியால் ஏமாற்றப்பட்ட கணவன் பாலமுருகன் மற்றும் தாய்மாமா காளிமுத்து ஆகியோர் சேர்ந்து சந்தன மாரியம்மன் நேற்று கொலை செய்தனர். டூவீலரில் வந்த சந்தன மாரியம்மன் கணேஷ் நகர் பகுதியில் மறைந்திருந்த கணவன் பாலமுருகன் மற்றும் தாய் மாமா ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..