பத்தாம் வகுப்பு தகுதியுடன் தேவையில்லாத தபால் துறை பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள், காலியிடங்கள் குறைத்த விவரம், எப்படி விண்ணப்பிப்பது? போன்ற தகவல்களை இப்பதிவில் பார்ப்போம். தபால் அலுவலர், உதவி தபால் அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு கிடையாது. பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்தே பணி வழங்கப்பட வேண்டும் என்றாலும் தமிழ் மொழியை பயின்று இருப்பது அவசியம்.

தபால் துறையின் 40 ஆயிரத்து 881 காலியிடங்களும் அதில் தமிழ்நாட்டில் மட்டும் 3167 காலி பணியிடங்களும் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிந்திருப்பது மற்றும் 18 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருப்பது வேலைக்கான தகுதியாக பார்க்கப்படுகின்றது. SC, ST பிரிவுகளுக்கு ஐந்து ஆண்டுகளும் OBC பிரிவுகளுக்கு மூன்றாண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு உண்டு. 10 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும் தபால் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு Indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க பிப்ரவரி 16ம் தேதி கடைசி நாளாகும்.