கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் மண்டியா மேலுக்கோட்டையின் சர்வோதய கர்நாடகா கட்சியின் வேட்பாளர் தர்ஷன் புட்டன்னையா வெற்றி பெற்றார். இவர் சீமான் ஆதரவு கொடுத்ததால்தான் வெற்றி பெற்றதாக நாம் தமிழர் கட்சியின் ஐடி விங் பொறுப்பாளர் சுனந்தா தாமரைச்செல்வன் பதிவிட்டுள்ளார்.

இதை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதாவது காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்த்து வரும் நாம் தமிழர் கட்சி தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் ஜெயித்ததற்கு நாங்கள் தான் காரணம் என்று கூறியது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. மேலும் இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளரை நாம் தமிழர் ஆதரவு வேட்பாளர் என்று அடித்து விடும் நாம் தற்குறி கட்சி ஐடி விங் தலைவி என்று கலாய்த்துள்ளார்.