உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் வசிக்கும் ஷெஹ்சாத் அக்மத் என்பவர், தன்னை ஜிஎஸ்டி ஆய்வாளராக (GST Inspector) எனக்கூறி, இக்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் வரதட்சனை கேட்க தொடங்க, இக்ராவின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, இக்ராவின் சகோதரர் விசாரணை மேற்கொண்டதில், ஷெஹ்சாத் வேலைவாய்ப்பு இல்லாதவர் என்றும், போலி யூனிபார்மில் விழிப்புணர்வு படங்களைப் போட்டு அனைவரையும் ஏமாற்றியவர் என்றும் தெரியவந்தது.இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அப்போது ஷெஹ்சாத் ஒரு மருத்துவமனையில் மார்புவலி ஏற்பட்டது எனக் கூறி மறைந்து இருந்தார்.

உடனே போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். கைது செய்தபோது, போலி ஜிஎஸ்டி போலீஸ் யூனிபார்ம், போலி பெயர் பலகைகள், கள்ள ஆதார் அட்டைகள், ஐடி கார்டுகள் மற்றும் போலீசாருக்கான காப்புகள் ஆகியவை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மற்றொரு தேர்வில் தேர்ச்சி பெற்ற நபரின் விபரங்களை வைத்து ஆவணங்கள் உருவாக்கி, யூட்யூப் மூலம் போலீஸ் பணியின் நடத்தைகளை கற்றுக்கொண்டு  நாடகமாடியதாகவும் கூறியுள்ளார் . பின்னர் ஷெஹ்சாத் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது போலி யூனிபார்முடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.