விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஞானோதயம் கிராமத்தில் ரீட்டா(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் சத்தியசீலன்(45). இவர் கடந்த ஏப்ரல் மாதம் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி ரீட்டா கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து ரீட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கலசப்பாக்கம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவரது வாகனத்தின் எண் பலமுறை செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டிருப்பதை காவல்துறையினர் அறிந்தனர். இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாயன் என்பவரின் மகன் சீனிவாசன்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு மொத்தம் 8 பவுன் நகைகளை பறித்து சென்றுள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த 8 பவுன் நகைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.