தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல் 8.50 மணிக்குள் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் சேலம் திருவாக்கவுண்டனூர் ஆரம்ப பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்களுடன் அமர்ந்து வழங்கப்படும் உணவின் தரம், சுவை உள்ளிட்டவைகளை கேட்டறிந்து உறுதி செய்தார். இங்கு மாணவர்களுடன் அமர்ந்து உரையாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.