தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் இப்போது லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் இப்போது சென்னையில் நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஸ்கின் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து ரசிகை ஒருவர் தளபதி விஜய்யை நேரில் பார்க்க நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்து உள்ளார். பின்  வீட்டின் வாசலில் நின்றுக்கொண்டு சிசிடிவி கேமராவில் விஜய் அண்ணாவை பார்க்கவேண்டும் என கண்ணீர் விட்டு ரசிகை அழுகிறார். தளபதியை பார்க்க தன் வீட்டின் வாசல் வரை வந்து கோரிக்கை வைத்துள்ள ரசிகையை விஜய் சந்திப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.