இந்தியாவில் டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை இருக்கிறது. ரேபிடோ பைக் சேவையில் கட்டணம் குறைவு என்பதால் இந்த சேவை தற்போது பயணிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த சேவிகா (34) என்ற பெண் இன்று ரேபிடோ பைக்கில் சென்றுள்ளார். அவருக்கு இன்று தான் பிறந்தநாள். தன்னுடைய உறவினர் வீட்டில் இரவு தங்கி இருந்த சேவிகா இன்று ரேபிடோ பைக்கில் சென்றுள்ளார்.

இவர்கள் அண்ணாசாலை அருகே வந்தபோது பைக்கை ஒட்டிய ஆனந்தன் திடீரென வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார். இவர்கள் அண்ணாமலை காமராஜர் அரங்கம் அருகே சென்ற போது திடீரென லாரி ஒன்று பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சேவிக்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். ஆனந்தன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகிறார்கள்.