திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் மதுராபுரி பகுதியில் சிங்கராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாய சுந்தரி என்ற மனைவி உள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு சகாய சுந்தரி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். தற்போது இவர் மண்ணச்சநல்லூர் பாளையம் தொடக்கப்பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி சகாய சுந்தரி அரசு தேர்வுகள் இயக்குனரகத்திற்கு அனுப்பி வைத்த சான்றிதழ்கள் போலியானது என்பது தெரியவந்தது. அவர் சுமார் 25 ஆண்டுகளாக போலி சான்றிதழை கொடுத்து வேலை பார்த்ததால் முசிறி கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.