தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, M.E, M.Tech, M.Arch, M.planபட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் 2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 25ஆம் தேதி நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து மார்ச் 26 ஆம் தேதி CEETA நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த நுழைவு தேர்வுக்கான முடிவுகள் வருகின்ற ஏப்ரல் 15ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனை தேர்வர்கள் https://tancet.annauniv.edu/என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். டான்செட் தேர்வு எழுதியவர்களுக்கான கலந்தாய்வு கோவையில் நடைபெறும் எனவும் சி இ இ டி ஏ தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.