தமிழக ஊரகப்பகுதிகளில் மின் விநியோகம் அதிகரித்துள்ளதை மத்திய அரசு பாராட்டியுள்ளது. தமிழகத்தில் மின்விநியோகம் உயர்ந்ததால் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே சிங் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தேசிய சராசரி அளவை விட தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் அதிக அளவு மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் மின்விநியோகமானது தினசரி 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 24 மணி நேரமும் விநியோகம் சீரான முறையில் வழங்குவதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார்.