பிரதம மந்திரி விஷ்வகர்மா கவுசல் சம்மான் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, கடந்த 3 வருடங்களாக பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவாதங்களில் ஆக்கப்பூர்வமான முறையில் பலரும் பங்குகொள்கின்றனர் என தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும் பட்ஜெட் உருவாக்கம் குறித்து ஆலோசிப்பதற்கு பதில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விசயங்களை நடைமுறைபடுத்துவதற்கான சிறந்த சாத்தியப்பட்ட வழிகளை பற்றி விவாதத்தில் பங்கேற்றவர்கள் பேசி வருகின்றனர் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். சுயசார்பு இந்தியாவின் உண்மையான மெய்ப் பொருளுக்கான அடையாளங்களாக திறமையான கைவினை கலைஞர்கள் திகழ்கின்றனர் என பிரதமர் மோடி புகழ்ந்து பேசியுள்ளார்