சபரிமலையில் கார்த்திகை திருநாளை ஒட்டி மகர விளக்கு பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் ரயில்களிலும், பேருந்துகளிலும் சுவாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு வசதிகளையும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டல் சமீபத்தில் கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார். ராஜேஷ் பிண்டல் இருமுடி கட்டி 18 படிகளை ஏறி ஐயப்ப சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு விக்கிரகத்தில் வைத்து வழிபட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.