80, 90s-களில் ரசிகர்களின் பேவரெட் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் கடந்த 1991-ம் வருடம் புது நெல்லு புது நாத்து எனும் படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் படமாக அமைய தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் 15 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்து வந்தார்.

எனினும் அவர் ரஜினியுடன் மட்டும் படமே நடிக்கவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சுகன்யா ரஜினியுடன் ஒரு படம் கூட நடிக்காதது பற்றி கூறியுள்ளார். அதாவது “15 வருடங்களாக பிஸியாக ஓய்வு இன்றி நடித்த எனக்கு ரஜினியுடன் நடிக்க மட்டும் வாய்ப்பு அமையவில்லை. ஒரு படப்பிடிப்பிற்கு போக விமான நிலையம் சென்றபோது கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை சந்தித்தேன். என்னை அவர் பார்த்ததும் திட்டி விட்டார்.

நீங்கள் எதற்காக ரஜினி படத்துல நடிக்க மாட்டேன் என சொன்னீர்கள் என்று கேட்டார். அப்போது எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. முத்து திரைப்படத்தில் ரோஜா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. எனினும் இதுகுறித்து எனக்கு தெரியாமலேயே இருந்தது என சுகன்யா கூறியுள்ளார்.