தற்போது விஜய் டிவி எனில் பிரியங்காவும், அவரது சிரிப்பும் தான் மக்களுக்கு நியாபகம் வருகிறது. அந்த அளவுக்கு இத்தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என 2 நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா. சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா அவர்களின் சுற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில்  போட்டியாளர் சந்திரன் பற்றிய ஏவி வீடியோவை பகிரும்போது, அவர் தம் தாய் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். சிங்கிள் மதராக 12 ஆண்டாக வீட்டு வேலை செய்தெல்லாம் தங்களை தாய் வளர்த்தது பற்றி சந்திரன் உருக்கமாக பேச, அதைக்கேட்டதும் பிரியங்கா உடனே கண்ணீர்விட்டு அழுகிறார். அதாவது, சிங்கிள் பெற்றோராக பிள்ளைகளை வளர்க்கும் அனைத்து சிங்கிள் பெற்றோருக்கும் லவ் யூ என எமோஷ்னலாக பேசுகிறார்.